September 16, 2007

யார் குற்றம்? - நவநீ

"ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், கேன்டீன்ல சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இருமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! முதல்ல பெட் மேல இருக்கற ஒன்னோட மருந்து, மாத்திரை எல்லாத்தயும் எடுத்துவை. ஸ்வரேஷ் எடுத்துச் சாப்ட்டாலும் சாப்டுருவாம்பா" என்றபடியே தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டுச் சமையலறையில் இருந்தவளிடம் விடைபெற்று அவசர அவசரமாகச் சென்றுவிட்டான்.செல்போனை 'வைப்ரேஷன்' மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப் போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக் கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவி. அவர் கேள்விகளைச் மாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்' என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, மெஸேஜைப் படித்தான். குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடம் என்ற செய்தியைப் படித்து இடிந்தே போய்விட்டான் நிதிஷ். யார் குற்றம்? எனது கதையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.

No comments: