September 16, 2007

அம்முவாகிய நான்....பத்மா மகன்

உள் மனதிலிருந்து பகிர்ந்துகொண்ட இவர்களின் குரலிலிருந்து, உழைப்பையும், உணர்வுகளையும் பார்க்க முடிந்தது. நல்ல இயக்குனர்கள் வரிசையில் பத்மா மகன் வருவார் என்பதில் துளியளவும் ஐயமில்லை. அவருடைய இத்தனை வருட உழைப்பு, வலி, அனுபவம் அனைத்தும் அவருடைய வார்த்தைத் தேடலில் தெரிந்தது. காரணம் சினிமாவில் நிரந்தரமாகக் கால் பதிப்பதென்பது எவ்வளவு வலியுடையது என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருடைய இந்தப்படம் சிறந்த வெற்றியடைவதோடு, உலகம் முழுவதும் பேசப்படவேண்டும் என்று வாழ்த்துவதோடு, இவருக்கு வாய்ப்புக் கொடுத்த திரு.பார்த்திபன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இதில் பேசியவர்களின் உணர்வுப்பூர்வமான பகிர்தலின் வாயிலாகவே, இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

No comments: