November 15, 2007

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

  • பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி : சதத்தை நழுவ விட்ட டெண்ட்டூல்கர்இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.
    இன்று குவாலியர் நகரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றதன் மூலம் 3-1 என்கிற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ளது.
    தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
  • காபந்து அரசை அமைக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் :
    பாகிஸ்தானின் தற்போதை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், நாட்டை நிர்வகிக்கப் போகும் இடைக்கால அரசு பற்றிய அறிவித்தல் ஒன்று நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சியாராலியோனில் புதிய அதிபர் பதவியேற்றார் : சியாரா லியோன் நாட்டின் தலைநகரில் நடந்த வைபவம் ஒன்றில் ஏர்னஸ்ட் கொரோமா அவர்கள் அந்த நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். ஆயிரக்கணக்கான சியாரா லியோன் மக்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்
  • வங்காளதேசத்தில் சூறாவளி : வங்காளதேசத்தின் கரையோரப்பகுதிகளை கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.
    இந்த சூறாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்
  • விளையாட்டுத்துறையில் போதைப்பொருட்பாவனை குறித்து ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை : விளையாட்டுத்துறையில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய அனைத்துலக சீலம் ஒன்றை கடைப்பிடிக்க சில அரசுகளும், விளையாட்டுத்துறைச் சம்மேளனங்களும் தயக்கம் காட்டுவதால், விளையாட்டுத்துறையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் பாதிப்படைந்துள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவரான ஷோக் றோக் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்
  • இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன : இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது
  • பஸ்ராவில் கொலை செய்யப்படும் பெண்கள் : இராக்கின் தென்பகுதி நகரான பஸ்ராவில், மதத்தீவிரவாதிகளால், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் போன்ற வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக, அந்த நகரின் தலைமைப் பொலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்
  • வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

No comments: