December 01, 2007

ஞானிகள் இத்தகைய காந்தம் போன்றவர்கள்

"காந்தத்தை தரையில் தேய்த்தால், அதன்மீது மண்ணில் இருக்கும் இரும்புத் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதேசமயம் மண், காந்தத்துடன் ஒட்டுவதில்லை. இவ்விடத்தில் காந்தம் தன்னுடன் இரும்புத்துகளை ஈர்க்க வேண்டும் என்றோ, இரும்புத்துகள் தான் காந்தத்திடம் செல்ல வேண்டுமென்றோ எண்ணுவதில்லை. ஆனால், இவ்விரண்டின் விருப்பம் இல்லாமலேயே அவை ஒன்றிவிடுகின்றன. இரும்புத்துகளை ஈர்க்கும் அளவிற்கு, காந்தம் சக்தி பெற்றிருப்பதால், இயல்பாகவே இந்நிகழ்வு நடந்து விடுகிறது. அப்போது, காந்தத்தின் சக்தி இரும்புத்துகளுக்குள் பாய்கிறது. எனவே, இரும்புத்துகளும் காந்த தன்மை பெறுகிறது. ஞானிகளும் இத்தகைய காந்தம் போன்றவர்களே. ஒருவர் தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஞானிகள் அருகில் செல்லும்போது, தானாகவே அவருடன் ஒன்றிவிடுகிறார். ஞானியிடம் ஒன்றிச் செல்பவர்கள் மனதில் நல்ல எண்ணங்களோடும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள் இரும்புத்துகளுக்கு ஒப்பானவர் ஆவர். இவர்கள் எளிதில் ஞானிகளிடம் விரும்பி ஒட்டிக்கொள்வர். அதேசமயம் மண் போன்று மந்த தன்மை உடையவர்கள் ஞானிகளை ஆரத்தழுவிக் கொண்டாலும்கூட அவர்களுக்குள் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. ஆகவே, மனதை இறைவனிடம் செல்லும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும்" - பரமஹம்ச நித்யானந்தர்

No comments: