December 06, 2007

தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணிக்கு தண்டனை

ஷமீனா மாலிக் : தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதைகள் எழுதிய ஒரு பிரிட்டிஷ் பெண்மணிக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷமீனா மாலிக் எனப்படும் அந்தப் பெண்மணியின் குற்றம், குற்ற நடவடிக்கையின் விளிம்பிலிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தீவிரவாதத்துக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படும் ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் பிரிட்டிஷ் பெண்மனி இந்த ஷமீனா மாலிக் ஆவார். அவர் தன்னை கவிதைத் தீவிரவாதி எனக் கூறிக்கொள்கிறார். அவர் தனது கவிதைகளில், முஸ்லீம்கள் அல்லாதவர்களின் தலை துண்டிக்கப்படுவதை பாராட்டியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கான ஒரு ஆவணத்தை அவர் வைத்திருந்தார் என்கிற குற்றறச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளளார்

No comments: