December 22, 2007

உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை அதிகாலை, உத்தரப் பிரதேச போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து, பாரபங்கி ரயில் நிலையத்தில் அந்த இரு நபர்களையும் கைது செய்தார்கள். முகமது காலித் மற்றும் முகமது தாரிக் என்ற அந்த இருவரும், வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். லக்னோ, ஃபைசாபாத் மற்றும் வாரணாசி நகரங்களில் நீதிமன்ற வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இரு நபர்களும், வெடிபொருள்களுடன் பிடிபட்டதாக, உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிஜ்லால் தெரிவித்தார்

No comments: