December 22, 2007

இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து

உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: