May 01, 2008

சென்னை - இந்தியாவின் இரண்டாவது சிலிகான் பள்ளத்தாக்கு!

இந்தியாவின் ஐ.டி. தலைநகராக சென்னை மாறத் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வரும் பெங்களூரூக்குப் போட்டியாக சென்னை களம் இறங்கி இருக்கிறது. அதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை திகழ ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவில் உள்ள 10 முன்னணி ஐ.டி. ஏற்றுமதி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சென்னையில் செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஐ.டி. நிறுவனங்கள் இல்லை. விப்ரோ, டிசிஎஸ், காக்னிசன்ட், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான நிபுணர்களுடன் தனது தொழிலை சென்னையில் நடத்தி வருகிறது.

மேலும் மின்ட்ரி, போலாரிஸ், பட்னி,ஹெக்ஸாவேர், டெக் மஹேந்திரா போன்ற நிறுவனங்கள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் தனது வியாபார எல்லை நீட்டித்துக் கொண்டே போகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் அதன் மிகப் பெரிய தயாரிப்பு பணிகள் எல்லாம் சென்னையில்தான் நடைபெறுகிறது.

"சென்னையில் மட்டும் எங்களுக்கு 6 நிறுவனங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சென்னை நகரில் இதுவரை நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். இன்னும் சிலமாதங்களில் சிறுசேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் 21 ஆயிரம் பணியாளர்களுடன் எங்களின் பணியைத் தொடங்க இருக்கிறோம்" என்கிறார் டிசிஎஸ்-இன் செய்தித் தொடர்பாளர்.

உலகத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஐ.டி. நிபுணர்களைக் கொண்ட நகரமாக விளங்க இருக்கும் சென்னை நகரில் மஹேந்திரா நிறுவனம் 25 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் மொத்தம் 75 ஆயிரம் பணி இடங்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பணியாளர்கள் இருப்பதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சென்னை பொறுப்பாளார். இந்த எண்ணிக்கை பி.பி.ஓ. பணிகளை சேர்க்காதது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 35 ஆயிரமாக்க திட்டமிட்டுள்ளது விப்ரோ.

இதே சம அளவு எண்ணிக்கையில் செயல்படுகிறது காக்னிஸன்ட் நிறுவனம். உலக அளவில் தனது நிறுவனத்தின் பணிகளில் 40% -யை சென்னையில்... தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/சென்னை-இந்தியாவின்-இரண்டாவது-சிலிக்கான்-பள்ளத்தாக்கு

No comments: