July 30, 2007

வானம் வசப்படும்!!

"சாதனையாளர்கள் செய்வதைப் புதுமையாகச்செய்வர்"
(Winners Dont Do Different Things But They Do Things Differently) என்பார் ஷிவ் கேரா. மனிதப்பிறவி என்பது மகத்தானது, அதிலும் எந்தக் குறையுமில்லாமல் பிறப்பதென்பது கடவுள் சித்தம் என்று நாம் நினைக்கிறோம். மனிதப்பிறவி மகத்தானதுதான். ஆனால் குறை என்பது மனதில் மட்டுமே இருக்கக்கூடாது, மனதில் தன்னம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியும், பொறுமையும் இருந்தால் சிகரம் என்ன? வானமே வசப்படும்!! இது வெறும் வாய் ஜாலம் இல்லை. இந்த வீடியோப் பதிவைப்பார்க்கும்போது கண்களின் கடைசி விளிம்பில் கண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லைதான்! ஆனால் இதயத்துக்குள் எங்கோ ஒரு மூலையில் மின்சாரம் பாய்வதையும் மறுக்க முடியவில்லை. நன்றி : நெடுவாசல் சுரேஷ் - பூனா, இந்தியா

No comments: