July 30, 2007

செல்போனா! ஐயோ வேண்டாம்!! எச்சரிக்கை!!!

நன்றி : நண்பர் தொண்டி முகமது அலி - சவூதி அரேபியா (NPC)

செல்போன் என்பது அத்யாவசியமான ஒன்றாகிப்போன இன்றையச் சூழலில், கோவில் வாசலில் பிச்சைக்காரர்களிடம் சில்லறை இல்லையப்பா என பத்து ரூபாய் நோட்டைக் காட்டினால், அவர் "சார் கொஞ்சம் இருங்க!...... ஹலோ! தம்பி நான் கோயில் வாசல்ல இருந்து "குருசாமி" பேசுறேன், ஒரு பத்து ரூபாய்க்கி சில்லறை எடுத்துட்டு வா, நான் சாயாந்தரம் வந்து மொத்தமா கணக்க சரி பண்ணிர்றேன்" என்று தன் செல்போனில் யாரிடமோ பேசி நொடிப்பொழுதில் பையன் சில்லறையோடு வந்து நிற்க, அடுத்த நொடியில் நமது கையில் ஒரு ரூபாய் போக ஒன்பது ரூபாய் பாக்கியைக் கணகச்சிதமாகத் திணித்துவிட்டு போகச்சொல்லும் காலமாகி விட்டது. என்ன செய்ய? அனைவரும் அவரவர் தொழிலில் அதிபர்களாகி விட்டனர். ஆனால் ஆபத்து எங்கு காத்திருக்கிறதென்றால், நீண்ட நேரம் காதுகளில் செல்போனை வைத்துப்பேசி, கழுத்து ஒரு பக்கம் இழுத்து, காக்காவலிப்பு வந்தவர்போல நடப்பது போய், மூளையில் கட்டி, புற்றுநோய் அளவுக்குக் கொண்டுபோய்விடுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
எனது மரியாதைக்குரிய நண்பர் முகமது அலி (NPC) அவர்கள் சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பி வைத்த இந்தத் தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபற்றி முழுமையாகத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க:http://navneethsmart.googlepages.com/MobilePhoneAlert.tif

No comments: