December 03, 2007

கரடி பொம்மைக்கு 'முகமது' பெயர் சர்ச்சை: பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடான் அதிபர் மன்னிப்பு

  • சுடான் தலைநகர் கார்டூமில் பள்ளி ஆசிரியையாக இருந்துவருகிறார் கில்லியன் கிப்பன்ஸ்சுடானில், தனது வகுப்பிலுள்ள குழந்தைகள் ஒரு கரடி பொம்மைக்கு 'முகமது' என்று பெயர்வைக்க அனுமதித்த காரணத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடானின் அதிபர் மன்னிப்பு வழங்கியுள்ளார். முஸ்லிம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-சுடான் இடையிலான உறவுகளிலும் அதற்கும் மேலாய் மேற்கத்திய நாடுகள்-இஸ்லாம் இடையிலும் இச்சம்பவம் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளது
  • ரஷ்ய தேர்தல்: தன் கட்சியின் வெற்றி நியாயமானது என்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின் : ரஷ்யாவில் நேற்று ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நியாயமானவை என்றும், ரஷ்யாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் சமிக்ஞையே இந்த வெற்றி என்றும் அதிபர் விளாடிமிர் புட்டின் விபரித்துள்ளார்
  • நவாஸ் ஷெரிஃப் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடை : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரிஃப் அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது
  • உலக காலநிலை மாற்றம் குறித்து பாலியில் உலக மாநாடு துவங்கியது : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, இந்தோனேஷியத் தீவான பாலியில், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை மேற்கொள்கிறார்கள்
  • வெனிசுவேலா அரசியல் சாசன திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அதிபர் ஹியூகோ சாவேஸ் தோல்வி : வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ், நாட்டின் அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த போதிலும், மீண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்
  • வட இலங்கையில் கடும் சண்டை - பலர் உயிரிழப்பு : இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் முகமாலை போர்முனைகளில் இன்று திங்கட்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 42 விடுதலைப் புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது

No comments: