September 24, 2007

ராமர்பால விவகாரம் பற்றி தா.பாண்டியன்!

மத வெறியைக் கிளப்பி குழப் பத்தை உண்டாக்கிப் பார்க்கும் கூட்டத்தினிடத்தில் இனியும் அமைதி காப்பது இயலாத காரியங்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர் வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டதாவது:இந்திய நாட்டில் மதவெறி சக்திகளின் அராஜகம், திமிர்த் தாண்டவம், ஆணவப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.விசுவ இந்து பரிசத்தின் தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனதா கட்சியின் முன் னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமரைப் பற்றி விமர்சித்ததற்காக, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவருக்கு தங்கம் பரிசளிக்கப்படும் எனவும், இந்தப் பரிசைத் துறவிகள் வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பது என்பது தமிழகத்தின் கழுத் தையே அறுப்பதற்குச் சமமா கும். இந்த மதவெறிக் கும்பல், மதவெறியைக் கிளப்பி, குழப் பத்தை ஏற்படுத்தி கல வரங்களுக்கு விதையூன்றுகிறது.இந்தக் கும்பலின் ஆத்திர மூட்டல்களுக்கு, மக்கள் இனியும் அமைதி காப்பது இயலாத காரியம். மத்திய அரசு உடனடியாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து மத வெறிக் கும்பல்களை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல், இந்திய நாட்டில் அமைதி குலையும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக் கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: