December 07, 2007

நீதிமன்றத்துக்கு வருமாறு இராமருக்கும் அனுமானுக்கும் உத்தரவு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நீதிபதி, சொத்து தொடர்பான வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்காக இந்துக் கடவுள்களான இராமரையும், அனுமாரையும் நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார். இராமரும், அனுமாரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அந்த நீதிபதி, ஆகவே அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைப் பிரசுரித்துள்ளார். இந்த இரண்டு கடவுளர்க்கும் இரண்டு கோயில் அமைத்து வழிபடப்படுகின்ற ஒரு காணித்துண்டு குறித்தே, இந்த 20 வருடப் பிரச்சினை காணப்படுகிறது. அந்தக் காணி தனக்குச் சொந்தம் என்று கோயில் பூசாரி கூறுகிறார். ஆனால், அது இந்த இரண்டு கடவுளர்க்கும் சொந்தமானது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்

No comments: